Ad Code

Responsive Advertisement

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது.. - வெங்கடேஷ் பாபு

 ஒரு நூற்றாண்டை கடந்த

ஓவியத்தில் கண்ணீர்

கரை படிகிறது..

ஒரு நீண்ட கவிதை

கற்பனையிலேயே தீயிடபடுகிறது..

ஓராயிரம் இசைமீட்டிய

ஒரு யாழின் நூல்

அறுபடுகிறது..

ஒரு அடையாள சிற்பம்

புதை மணலின் மேல்

வைக்கப்படுகிறது..

ஒரு இன்பவியல் இலக்கியம்

கல்லறையில் தூங்க

வைக்கப்படுகிறது...

ஒரு கலை

கண்கள் கட்டப்பட்டு தூக்கிலிடபடுகிறது..

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது

ஒரு சாத்தானால் அக்காதல்தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறது..

நிராகரிப்பு..

நிராசை..

துக்கம்..

அவமானம்..

இவைகளை கட்டித்தழுவி

முத்தமிடச் சொல்கிறது...

                                                                    வெங்கடேஷ் பாபு

Post a Comment

1 Comments

Close Menu